
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஆட்டத்தின் 2-வது பகுதியில் பனிப்பொழிவு காரணமாக 2 ஓவர்களுக்கு ஒரு முறை புதிய பந்தை பயன்படுத்த வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுல் (61), மயங்க் அகர்வால் (69) ஆகியோரின் அதிரடியால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இருப்பினும் ஷிகர் தவண் 49 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், இறுதிக்கட்டத்தில் மார்கஸ் ஸ்டாயினிஸ் 13 பந்துகளில் 27 ரன்களும் விளாச டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்