
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.

வரும் நவம்பர் 25 ஆம் தேதி நிவர் புயல் கரையை கடக்கவிருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நிவர் புயலை முன்னிட்டு செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.





Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News