Type Here to Get Search Results !

RCB vs PBKS | கோலி அபாரம் + தினேஷ் கார்த்திக் அதிரடி; ஆர்சிபி முதல் வெற்றி!

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 6-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார். அதிரடியாக ஆடி இருந்தார் தினேஷ் கார்த்திக்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவன் 45, பிரப்சிம்ரன் 25, லிவிங்ஸ்டோன் 17, சாம் கரன் 23, ஜிதேஷ் சர்மா 27 மற்றும் ஷஷாங் சிங் 21 ரன்கள் எடுத்தனர். 8 பந்துகளில் 21 ரன்களை எடுத்திருந்தார் ஷஷாங். ஆர்சிபி சார்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.