Type Here to Get Search Results !

‘ரசிகர்கள் வீரர்களை அவமதிக்கக்கூடாது’ - ஹர்திக் பாண்டியாவுக்கு அஸ்வின் ஆதரவு

சென்னை: ஐபிஎல் தொடரில் இந்த சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தை அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது.

கடந்த இரு சீசன்களிலும் பாண்டியா குஜராத் அணிக்காக விளையாடிய நிலையில் தற்போது மும்பை அணிக்காக களமிறங்கியதை ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் விமர்சித்ததுடன் போட்டியின் போது அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். மும்பை தனது 2-வது ஆட்டத்தை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி போதும் ஹர்திக்பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களின் கூச்சல் தொடர்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.