Type Here to Get Search Results !

‘ஒரு கூட்டு கிளியாக...’ - ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய ரோகித், ஹர்திக் @ மும்பை இந்தியன்ஸ் கேம்ப்

மும்பை: நாளை 17-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்நாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா என இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு அணிகளில் ஒன்றாக உள்ளது மும்பை இந்தியன்ஸ். அந்த ஐந்து முறையும் அணியை கேப்டனாக வழிநடத்தியவர் ரோகித்தான். நடப்பு ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக அவர் வழிநடத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருமுறை சாம்பியன் பட்டமும், மற்றொரு முறை இரண்டாம் இடமும் பிடித்து தொடரை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.