
அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது ஆப்கானிஸ்தான் அணி.
கடந்த அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் பங்கேற்று விளையாடிய 10 அணிகளில் ஒன்றாக ஆப்கனும் இருந்தது. இது அந்த அணி பங்கேற்று விளையாடிய மூன்றாவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். பெரும்பாலான விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது கணிப்பையும் தவிடு பொடி ஆக்கும் வகையில் தான் ஆப்கன் வீரர்களின் ஆட்டம் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்