
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. அனுபவமான பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு அளிப்பாரா கோலி என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக் காற்று இந்திய அணியின் பக்கம்தான் வீசியது. கடைசி நாளில் 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி வசம் 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. மழை இல்லாமல் இருந்திருந்தால், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் இருந்திருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்