
நீளம் தாண்டும் போட்டியில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கவிட்ட அஞ்சு பாபி ஜார்ஜின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 19).
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்ஙனாசேரி எனும் ஊரில் 1977-ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சு பாபி ஜார்ஜ். இவரது அப்பா மார்கோஸ், தனது மகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை சிறு வயது முதலே ஊக்குவித்து வந்தார். பள்ளிக் காலத்தில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டப் போட்டியில் மாநில அளவில் பதக்கங்களை குவித்தார். கோழிக்கோடில் உள்ள விமாலா கல்லூரியில் படித்த காலத்தில், அங்கு சக தடகள வீரராக இருந்த பாபி ஜார்ஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்