Type Here to Get Search Results !

ரயில்கள், ரயில் நிலையங்களில் முகக்கவசம் இல்லாவிட்டால் ரூ.500 வரை அபராதம் அமல்

ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வழிகாட்டு விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணிவது தவிர துப்புவது உள்ளிட்ட தொற்று பரப்பும் செயல்களை செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அடுத்த 6 மாதங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே கூறியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதத்தை தமிழக அரசு விதித்து வருவது குறிப்பிடத்தக்கது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.