
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை என்று யுனிவர்ஸ் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார். ஆகவே, 45 வயதுக்கு முன்னர் கிரிக்கெட்டிலிருந்து விலக வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய கிறிஸ் கெய்ல், வயது என்பது தன்னைப் பொறுத்தவரை வெறும் எண்ணிக்கை தான் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
![]()
இந்தியாவில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தொடர் ஆகியவற்றில் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News