
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் மீண்டும் அச்சுறுத்தலாக உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியப்போதும், சீனாவில் வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பிய ஷன்ஹாய் நகரைச் சேர்ந்த 23 வயது மாணவிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறையால் மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிப்படுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஒரே நாளில் புதிதாக 25 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 87 ஆயிரத்து 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News